Sunday 21 September 2014

நீயாக ...

யாரோ வருவது போல்
ஒரு அரவம்...............
யாரோ பேசுவது போல்
ஒரு சத்தம்...............
யாரோ சிரிப்பது போல்
ஒரு ஒலி.....................
திரும்பி பார்க்கிறேன் - நான்
மீண்டும் மீண்டும்.............
அது நீயாக
இருக்க வேண்டும் என்று
கடவுளிடம் வேண்டியவாறு.

No comments: