Monday 6 January 2014

antha oru nimidam...

ஆயிரம் ஆயிரம் அலைபேசி
குறும் குறுஞ்செய்திகள்
அனுப்பியும் உன்னிடத்திலிருந்து
பதில் இல்லவே இல்லை...
நொடிகள் நிமிடங்களாகி
நிமிடங்கள் மணிகளானது...
மணிகளும் நேரங்களாகி
முப்பொழுதுகளை தின்றது...
உன்னிடத்தில் இருந்து
பதில் வராமல் போனதால்
பதட்டம் அதிகமாகி பின்
கலக்கம் குடிகொண்டது...
எப்படியும் தகவல் வரும்
என காத்துக் கிடந்த
எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகி
கோபங்கள் ஆத்திரமாயின...
அச்சம் விடை பெற்றப் பின்
உச்சம் அடைந்த ஏமாற்றம்
மிச்சம் சொச்சம் இருந்த உயிரை
துச்சமாய் மிதித்து துடித்தது...
அந்நேரம் அலைபேசியின் ஓசை
குறுஞ்செய்தியின் இசையாய்
ஒலித்து ஒளிர்ந்து எந்தன்
கவணத்தை திசைதிருப்பியது...
” போடா லூசு“ என்ற உன் ஒருவரி
கவிதை வந்து அத்தனையையும்
கல்நெய் காற்றில் கரைந்ததுபோல்
மறையச் செய்த மாயம்தான் என்ன?
என்னமோ போடி....
Z
(கல்நெய் - பெட்ரோல்)