Saturday 14 December 2013

penmaiyin vasanai suvai....

அன்றொருநாள்
என் வீட்டிற்கு நீ
வந்தபொழுது…
எனது அறையெங்கும்
நிரப்பிவிட்டுச் சென்றாய்
உன் வாசனையை…
வேறு யாராலும் உணரமுடியாத
அந்த அழுத்தமான ஆழமான
தீர்ந்து போகாத
வாசனையின் சுவையை…
ரசித்து ரசித்து
நாள்தோறும்
பருகிக்கொண்டே இருக்கிறேன்
என் மூச்சுக்கூட்டுக்குள்…
உன்னைப் பற்றிய நினைவுகளோடு
அந்த அறைக்குள்
நுழைகையில் எல்லாம்
என்னை தழுவிக்கொள்ளும்
அது மிருதுவாய்…
உன் பெண்மை கலந்த
அந்த சுக வாசனை
எங்கிருந்து புறப்படுகின்றது
என்பது மட்டும்
என்றும் ரகசியமாகவே
இருந்தது எனக்கு…
மற்றொருநாள்
மீண்டும் என் வீட்டிற்கு நீ
வந்த பொழுது…
உன்னிடம் மெல்ல கேட்டேன்
இந்த வாசனை புறப்படும்
ரகசிய இடம் எதுவென்று…
அந்த நொடிப்பொழுதில்
பிரகாசமாகி
பின் அமைதியாய் அருகில் வந்து…
என் இதயத்தில் கை வைத்து கூறினாய்
இதோ இங்கிருந்துதான் என்று…

Published with Blogger-droid v2.0.10

No comments: