Wednesday 9 May 2012

அன்பு உள்ளங்களாய்!

அன்பே!
இத்தனை நாட்கள்
எம்மிடம் இருந்தது
என்ன உறவு?

இப்போ சில காலம்
எம்முள் வந்தது
என்ன உறவு?

நம் உறவின் நெருக்கம்
நாளுக்கு நாள்
நெருங்கியே செல்கிறது

மானசீக நம் உறவின்
மனங்களிடையே சிறு
மகிழ்ச்சிகள் பொங்குது

நினைக்காத மாற்றங்கள்
நிஜமாக நடக்கையில்
நெஞ்செல்லாம் ஆனந்தம்

சிறு சிறு சீண்டலில்
சிலிர்த்திடும் ஆனந்தம்
சிந்திக்கவே முடியவில்லை

நட்புக்குள் கூட மனங்கள்
நம்மை போல் இப்படியா?
நம்பமுடியவில்லை

ஆயிரம் இருக்கட்டும்
ஆயுளுக்கும் நாம் இருப்போம்
அன்பு உள்ளங்களாய்!

No comments: