Tuesday 1 May 2012

வேலை இல்லாதவனின் பகல்....

நாகரீக பிச்சைகாரன்....
முப்பது நாட்களுக்குமான 
முழு தரிசனமாய் 
முதல் மாத சம்பளம் பெற்று 
அம்மாவுக்கு புடவை...
அப்பாவிற்கு வேஷ்டி சட்டை...
தங்கை விரும்பி அணியும் 
பச்சை நிற தாவணி....
தம்பி ஆசையாய் கேட்ட கைகடிகாரம்....
அனைத்தையும் வாங்கி கொண்டு ஊருக்கு பயண படுகையில் 
கூச்சமாகத்தான் இருக்கிறது...
நண்பனின் செருப்பை கேட்பதற்கு....
பிரியமுடன் பிரியன் ....

No comments: