Wednesday 9 May 2012

நீ மட்டும் தனியாக....

நீயும் நானும்
கைகோர்த்து நடந்த
கடைத்தெருவோரம் இன்று
நீ மட்டும் தனியாக
நடப்பதை என்னால்
நேரடியாக பார்க்கா விட்டாலும்
மனக் கண்ணில் பார்த்து
மனதார வருந்த முடிகிறது
அருகிருந்து ஆறுதல் கூற
முடியாத வருத்தத்துடன்!

No comments: