Monday 2 April 2012

நானுன் ரசிகை

காதல் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளோடு 
என்னருகில் நீ இருக்கின்ற காலங்களில்… 

என்னுயிரில் நீ இனிக்கின்ற நேரங்களில்… 
உன் வெட்கங்களை மட்டுமல்லாது கோபங்களையும் 
புன்னகைகளை மட்டுமல்லாது கண்ணீரையும் 
அழகை மட்டுமல்லாது அன்பையும் 
அணுவணுவாய் ரசிக்கிறேன் நான் ! 



ஆனால் நீயோ 
என்னைப் பார்க்கும்பொழுதெல்லாம் 
நானுன் ரசிகை என்கிறாய் ! 



தீராத பசிகொண்ட 
என் ரசனைகளுக்கு 
திகட்டாத உணவளித்துக் கொண்டிருப்பவள் 
நீதான் என்னும் உண்மை 
உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை…

No comments: