Monday 2 April 2012

பொய்யும் மெய்யும்…

என் தோள்களில் கன்னம் வைத்து 
ஏதேதோ பேசியபடியே 
நீ தூங்கிப்போகையில்… 



உன் உச்சந்தலையில் 
மெதுவாய் வைக்கிறேன் 
ஒரு பாசமான முத்தம்… 



ஆழமான அந்த 
முத்தத்தின் கதகதப்பில்… 

உன் தூக்கத்தின் இடையிலும் 
உனக்கே தெரியாமல் 
சிரிக்கிறாய் நீ அழகாய்…

No comments: