Thursday 8 March 2012

என்றும் இனிமையே!


அன்பே!
இன்றோடு நீ
என்னை விட்டு சென்றாலும்
நீ விட்டுச் சென்ற நினைவுகள்
என்றும் என் மனதிலே...!

நீ தந்த காயங்கள்
நெஞ்சோடு இருந்தாலும்
நினைத்துப் பார்க்கையில்
என்றும் இனிமையே!

உன்னாலே கிடைத்த
உறவுகள் ஆயிரம்
உயிரோட்டமான வாழ்க்கையின்
உயிருள்ள ஓவியங்கள்

சென்று வா அன்பே
உன் நினைவுகளுடன்
உனதன்பு உறவோடு
இன்னும் வாழ்வேன்..........!

No comments: