Thursday 8 March 2012

பரிதவிப்பான ஏக்கத்துடன்!

என் தனிமையின்
ஒவ்வொரு நிமிடங்களும்
உன்னுடன் பழகிய
நட்பின் கனம் நிறைந்த
ஓராயிரம் நினைவுகளை
அள்ளிக் குவிக்கின்றன
அத்தனையும் இங்கு
முத்து முத்தாக என்
கன்னங்களை நிறைக்க
உயிரும் கரைகிறது
அன்பே உன் பாசத்தின்
பரிதவிப்பான ஏக்கத்துடன்!

No comments: