Monday 26 March 2012

கண்ணீரை வரச்செய்து விட்டாள் !

மாதுவை பிடிக்க வேண்டிய வயதில்
மதுவை குடிக்க வைத்து விட்டாள் !

அவள் புகைப்படத்தை பிடிக்க வேண்டிய என்னை
புகைபிடிக்க செய்துவிட்டாள் !

இயற்கையை ரசிக்க வேண்டிய வேளையில்
இறப்பை ரசிக்க செய்துவிட்டாள் !

கனவுகள் வரவேண்டிய கண்களில்
கண்ணீரை வரச்செய்து விட்டாள் !

என் இதயத்தினுள் இருக்கவேண்டியவள்
ஏனோ அதை இரண்டாய் பிளந்து விட்டாள் !

பேதைக்கு அடிமையாக வேண்டிய என்னை
போதைக்கு அடிமையாக செய்துவிட்டாள் !

No comments: