Saturday 11 February 2012

காதலியாய் நீ இருக்க வரம் கொடுப்பாயா?


உடலாக நானிருக்கின்றேன் - நீ
உயிராய் இருக்க வரம் கொடு ....!
உள்ளமாக நானிருக்கின்றேன் - நீ
உணர்வாய் இருக்க வரம் கொடு ....!
எண்ணமாக நானிருக்கின்றேன் - நீ
எழுத்தாய் இருக்க வரம் கொடு ....!
சிந்தனையாக நானிருக்கின்றேன் - நீ
செயலாக இருக்க வரம் கொடு ....!
புயல் காற்றாய் நானிருக்கின்றேன் - நீ
தென்றலாக மாற வரம் கொடு ....!
வான வில்லாக நானிருக்கின்றேன் - அதில் நீ
வண்ணமாக இருக்க வரம் கொடு ........!
சுட்டெரிக்கும் தீயாக நானிருக்கின்றேன்
சுடரொளி தீபமாக நான் மாற வரம் கொடு ....!
ஒலியாக நானிருக்கின்றேன் - நீ
இசையாய் இருக்க வரம் கொடு .....!
வானமாக நானிருக்கின்றேன் - அதில் நீ
வண்ண நட்சத்திரமாக வரம் கொடு ....!
கடலாக நானிருக்கின்றேன் - அதில் நீ
வண்ண மீன்களாக இருக்க வரம் கொடு .....!
விதையாக நானிருக்கின்றேன் - அதில் நீ
விளைச்சலாக இருக்க வரம் கொடு ....!
நிலமாக நானிருக்கின்றேன் - அதில் நீ
நெற்பயிராயிருக்க வரம் கொடு ....!
வெறும் வெள்ளைகாகிதமாய் நானிருக்கின்றேன் -அதில் நீ
கவிதையாய் இருக்க வரம் கொடு .....!
வரம் கொடு பெண்ணே வரம் கொடு .......
காதலனாக நான் இருக்கின்றேன் - என்
காதலியாய் நீ இருக்க வரம் கொடுப்பாயா?
பெண்ணே ....!!!!

No comments: