Saturday 25 February 2012

உதாசீனப்படுத்தப்பட்ட அன்பு...


உன்னால்
உதாசீனப்படுத்தப்பட்ட
எம் அன்புக்கு இன்று
மாதம் ஒன்று பூர்த்தி ஆகிறது
உன்னால் கொல்லப்பட்ட
எம் உணர்வுகளும்
உன்னால் எம் மனம் என்னும்
கல்லறையில் உயிரோடு புதைக்கப்பட்ட
எம் இதயமும் அதனுள் அடைக்கப்பட்ட
எம் உன் நினைவுகளும்…..
உயிரற்று வாழும் எம்
உடலுக்கு வாழ்த்து சொல்லி செல்கின்றன…….
எமக்காக எம் கண்கள்
ஒரு துளி கண்ணீர் சிந்தத் துடித்தாலும்
அந்த ஒரு துளியினால்
உனக்கேதும் ஆகிடுமோ என்ற பயத்தில்
எம் கன்னத்தோடு நிறுத்தி விட்டோம்
உன்னால் சிதைக்கப்பட்ட கனவுகளுடன் நாம்…….


No comments: