Saturday 11 February 2012

சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன..


தினசரிகளின் சில நொடிகளில்
உன்னைக் கடந்து செல்ல நேர்கையில் எல்லாம்..
வார்த்தைகளோ.. ஜாடைகளோ.. ஏதுமன்றி..
இமை அசைக்காமல்.. விழி எடுக்காமல்..
கூரான பார்வை ஒன்றால்..
குத்திக் கடந்து விடுகிறாய்..
 
கடக்கும் கடைசி நொடித் துளியில்
கள்ளப் புன்முறுவல் வேறு..
 
 
மூர்ச்சையுராமல் மூர்ச்சையுருவதும்..
மயக்கமடையாது மயக்கமடைவதுமாய்..  
நான் தவிப்பது..
சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன..
 
 
.

No comments: