Saturday 25 February 2012

என்னை கரைசேர்ப்பாயா...?

என் எண்ணங்களில் நீந்தி
என்னுயிரை எடுத்து சென்றவளே!
என் நரம்புகளில் நடனமாடி
என்னின் ஒவ்வொரு நாழிகையிலும்
என்னையே தின்றவளே!
என்னின் இரத்தநாளங்களின் ஊற்றாக
என்றும் இருந்தவளே! - இதோ
இன்று நீயில்லாமல்
என்னுடல் ஜீவனில்லாமல் வாழ்கிறதடி!
எல்லோருக்கும் பிரியமானவளே
என்னை கரைசேர்ப்பாயா - இல்லை
கல்லறையில் தான் காண்பாயா?

No comments: