Sunday 8 January 2012

இதயத்தில் சுமந்தபடி!

உன்னுடனான நட்பின்
இனிமையான நாட்களில்
உன்னை உயிருக்கு உயிராக
நேசித்ததை தவிர
தவறென்று நானிங்கு
ஆற்றியது தான் என்ன!
நம் நட்பின் அன்பிற்கு
தண்டனை தான் இந்த
நட்புக்கு இடையான
பிரிவின் இடைவெளி?
இடம் மாறி நாம்
தொலைவாகி போனாலும்
இதயங்கள் அருகிருந்து
இடைவிடாது துடிக்கிறது
இனிய நினைவுகளை
இதயத்தில் சுமந்தபடி!

No comments: