Wednesday 28 December 2011

வேண்டும் உன் பாசம்....!


அமைதியான நேரம் - என்
மனது தேடிய நேசம்
அருகில் இல்லாத சோகம்
பனித்தது கண்களில் வந்து
கன்னங்களை வருடி இங்கு
கேள்விகள் கேட்டது நெஞ்சை
விடைகள் தேட எண்ணி
தோற்றது எந்தன் இதயம்
பாசப்பிரிவுகள் இன்று
பந்தாடுது இன்ப நினைவை
வேச நெஞ்சங்கள் மத்தியில்
வேண்டும் உன் பாசம்....!

No comments: