Wednesday 14 December 2011

உயிரே உனக்காகத்தான்....


எவ்வளவு பிடிக்கும்
என்னை என நீ கேட்கும் போதே
சொல்ல எல்லையை
தேடுகின்றேன்
எங்கு பார்த்தாலும் நீ தான்
தெரிவதால் இவ்வளவு
என்று இன்று வரை
வரையறுக்க முடியவில்லை
உன்னை எவ்வளவு பிடிக்கும்
எனக்கு என்று......
***********************
இதயமில்லாத என்னிடம்
இருப்பிடம் கேட்கிறான்
இயல்பாய் இருந்த
ஒருவன்..
***********************
வாசம் கொண்ட
மலர்களோடு மட்டும்
வசப்பட்டு இரு...
பேசாமல் பேசும்
என் மொழியை இவைகள்
உன் இதழ் வலிக்காமல்
முத்தமிட இந்த பூக்களால்
மட்டுமே முடியும்
என் சார்ப்பாக.....
**************************
சுடும் என் சுவாசத்தை கேள்
அது சுகமாய் ஜனிப்பது
உன்பெயரை தான்
சுற்றும் என் விழிகளை பார்
அதில் சுடராய்
தெரிவதும்
உன்முகம் தான்
உயிரில் ஒலிக்கும்
என் மொழிகேள்
அதில் மறந்தும்
ஒலிப்பது
உன்குரல் தான்
பாதை இல்லா
என் பயணம் கூட
உன் பார்வை பட்ட
பாதையில் தான்
உறங்கும் போது
நான் ஓய்வு
எடுப்பதும்
ஓயாத உந்தன்
கனவில் தான்
ஓடி கொண்டு இருக்கும்
என் இதயம்
ஓயாமல் துடிப்பதும்
உயிரே உனக்காகத்தான்

No comments: