Wednesday 14 December 2011

கைகழுவிச் செல்கிறாயே!!!...


நான் வானம் ஆகும் முன்னே மேகம் ஆனவளே!!..
நான் மேகம் ஆகும் முன்னே மழை ஆனவளே!!..
நான் கடல் ஆகும் முன்னே அலை ஆனவளே!!..
நான் அலை ஆகும் முன்னே கரை ஆனவளே!!..
நான் கலை ஆகும் முன்னே சிற்பம் ஆனவளே!!..
நான் சிற்பம் ஆகும் முன்னே சிலை ஆனவளே!!..
நான் கவிஞன் ஆகும் முன்னே என் காதலி ஆனவளே!!..
நான் கவிஞன் ஆன பின்னே என் கவிதைகள் ஆனவளே!!..
என் உடல் வருன் முன்னே என் உயிர் ஆனவளே!!..
என் உயிர் வந்த பின்னே என் உணர்வுகள் ஆனவளே!!..
உன்னை கைப்பிடிக்க நினைக்கும் முன்
என்னை கைகழுவிச் செல்கிறாயே!!!...

No comments: