Saturday 10 December 2011

காதலின் அருமை.....

நீங்கள் 
என்னை போலவே 
எப்போதும் 
எதையாவது 
கிறுக்கிக் கொண்டே இருந்ததுண்டா? 

பன்னிரெண்டு மணிக்கு மேலேயும் 
தூக்கம் வராமல் 
எப்போதாவது 
தைலம் தடவிக்கொண்டு 
தவித்ததுண்டா? 

அண்ணாசாலையில் 
அக்கம் பக்கத்தரையும் கவனிக்காமல் 
எதையாவது 
தனியாக 
புலம்பிக்கொண்டே போனதுண்டா? 

இடதுகால் செருப்பை 
வலதுகாலில் மாட்டிக்கொண்டு 
முழுசாக ஒரு பயணத்தை 
முடித்து கொண்டு வந்ததுண்டா? 

இருபது சிகரெட்டுகளை 
இரண்டே மணி நேரத்தில் 
ஊதி தள்ளியதுண்டா? 

"என்ன ஆச்சோ இவனுக்கு" 
என்ற அம்மாவின் ஏச்சுக்கு 
எப்போதாவது 
ஆளானதுண்டா? 

இதில் 
எதுவுமே இல்லையென்றால் 
உங்களுக்கு 
எங்கே புரியபோகிறது 
காதலின் அருமை. 

No comments: