Wednesday 7 September 2011

இப்படிக்கு,,,,


அன்பே என் காதல் 
கை கூடவில்லையே 
என்று நான் புலம்ப வில்லை, 

உன்னை முழுதாய் அறிந்து 
உனக்காக உயிர் தியாகம் 
செய்ய துணிந்த என்னை விட 
உன்னை வேர் யார் சந்தோசமாக 
வாழ வைக்க முடியும் 
என்று நினைத்து நினைத்து தான் 
என்றும் என் கல்லறையிலே 
புலம்பிக் கொண்டிருப்பேனடி, 

நீ என் காதலை 
ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கு 
என்ன காரணம் என்று எனக்கு தெரியாது 
ஆனால் நான் உன்னை அதிகமாக நேசிக்க காரணம் 
நீ என் மீது காட்டிய அளவில்லா அன்பு தான், 

அன்பே நான் புதைக்க படும் 
கல்லறையில் சுற்றி எங்கும் 
உன் நினைவுத் தூண்களை நாட்டிக்கொள்வேன் 
என் ஆயுள் முடியும் வரை 
உன் நினைவோடே 
இந்த பூமியில் மண்ணோடு மண்ணாக 
என் கல்லறையிலே மக்கி கொண்டிருப்பேன்........... 

இப்படிக்கு,,,,,,,,,,,உன்னவன் 


No comments: