Tuesday 20 September 2011

இறந்துவிட்டேன் மறைந்து விட்டேன்......


நீ விலகியது விளங்காமல்
காமம் நீங்கி காதலித்தேன்
கற்பனையில் வாழ்ந்து
சிந்திக்க மறந்தேன்
குடிப்பது குலத் தொழிலாய்
ஆத்திரம் என் பெயரின் சொல் பொருளாய்
புகைப்பது புது பழக்கம்
வெற்றிடத்தில் என் வாழ்வின் துவக்கம்
நண்பர்கள் தொலைத்து
நாணயம் இழந்தேன்
கண்ணிமை அசைவுக்கு
யாகங்கள் செய்தேன்
நெருப்பு சாம்பலாகி
விடியலில் குப்பையானேன்
விடிந்தபின்னே வேங்கையும் ஆனேன்
உண்மை சொன்னால்
இருந்தும் இறந்துவிட்டேன்
வாழ்ந்தும் மறைந்து விட்டேன்

No comments: