Tuesday 6 September 2011

ஆயுள் முழுதும்.................


ஐந்து வருடங்கள் 
கழிந்து 
இன்று 
அவளை 
பார்த்த பொழுதுதான் 
தெரிந்தது 
என் காதல் 
காதலோடு 
முடிந்து போனததற்கு 
காரணம் 

அன்பான துணை 
அழகான குழந்தை 
அமைதியான இல்லம் 
வளமையான வாழ்க்கை 

சந்தோசத்தின் 
உச்சத்தில் 
நான் 

நீ 
இந்த 
ஏழை கவிஞனின் 
கை பிடித்திருந்தால் 
அந்த 
பாரதி கண்ணம்மாவாக 
அரிசி பருப்பிர்க்குமே 
அழுது 
கொண்டிருந்திருப்பாய் 

என் காதலியே 
என்னை 
காதலிக்காததற்கு 
நன்றி 

என் ஆண்டவனே 
என் காதலியை 
என்னை காதலிக்காமல் 
செய்ததற்கு 
நன்றி 

உன் 
சந்தோசத்தின் 
உச்சம்தானடி 
என் 
காதலின் 
மிச்சம் 

அது போதும் - இந்த 
ஆயுள் முழுதும்.................

No comments: