Monday 5 September 2011

அடுத்த தலைமுறையையாவது!!!


கருணை கொலை 
செய்யுங்கள் 
எங்களை!!! 

புரிந்துகொள்ளாத 
உறவுகளால் 
பாதி பித்து 

புரிந்தும் 
சேரமுடியததால் 
மனத்தால் 
பாதி பித்து 

பொய்யுரைத்து 
பணிபெற இயலாத 
மன தைரியத்தால் 
பாதி பித்து 

அடுத்த வீட்டு 
அரை குறைகளுடன் 
ஒப்பிடுகையில் 
அரை பித்து 

சொந்தங்களில் எங்கள் 
சந்தங்கள் பாடுவதால் 
பாதி பித்து 

எங்கள் வாழ்க்கையை 
மாற்றும் ஜோசியர்களால் 
மன பித்து 

அவர்களை நாடும் 
இவர்களால் 
பாதி பித்து 

தனிமையின் 
எண்ணத்தால் 
பாதி பித்து 

தவறான 
வழிகாட்டுதலால் 
பாதி பித்து 

முழு பித்து 
ஆகு முன் 
எழுதிய 
மன ஒத்த 
சாசனம் 

முழு பித்தும் 
பிடித்துவிட்டால் 
கருணை கொலை 
செய்யுங்கள் 
எங்களை!!! 

விட்டு வையுங்கள் 
அடுத்த 
தலைமுறையையாவது!!! 

No comments: