Monday 5 September 2011

நெடுந்தூர பயணம்


நெடுந்தூர பயணம் 
தொடங்கிய இடம் நினைவில் இல்லை 
முடியும் இடமும் தெரியவில்லை 

இத்தனை வருட பயணத்தில் 
இலக்கை இன்னும் அடையவில்லை 
இலக்கே எனக்கு புரிய வில்லை 

என்ன கொடுமை சார் இது 
எங்கே போகிறேன் ? எதுக்கு போகிறேன் ? 
ஒன்னும் தெரியாமலயே 
பயணிக்கிறேன் ........ 

கடந்து வந்த பாதையை 
திரும்பி பார்த்தேன் 
தொடங்கிய இடம் தெரியவில்லை 

தடுக்கி விழுந்த இடம் 
வழுக்கி விழுந்த இடம் 
முட்டிக் கொண்ட இடம் 
எல்லாம் தெரிகிறது...... 

எங்கே போகிறேன் 
ஏன் போகிறேன் 
என்றுதான் தெரியவில்லை...... 

No comments: