Monday 5 September 2011

இயந்திரமயமான வாழ்க்கை .......


காலையில் எழுந்ததும் 
பல் துலக்கி 
குளித்து முடித்து 
ஆகாரம் உண்டு 
ஒன்று/இரன்டு மணிநேரம் பிரயாணித்து 
அலுவலகம் சேரும் முன் 
கடிகாரம் பகல் 11-ஐ தொட்டுவிடும் 

கணிப்பொறியை திறந்து 
அன்றைய செய்திதாள்களை அலசிவிட்டு 
மினஞ்சல்களுக்கு பதில் அனுப்பி முடித்து 
பார்த்தால் 
கடிகாரம் பகல் 1 என பல் இளிக்கும் 

மீண்டும் ஆகார மூட்டையோடு 
சென்று திரும்பினால் 
அரை நாள் ஓடியிருக்கும் 

மீண்டும் கணிப்பொறியை திறந்து 
அன்றைய பணிகளை செய்து 
அனுப்பவேண்டிய மினஞ்சல்களை அனுப்பி முடித்து 
திரும்பி பார்கையில் 
சில/பல SMS / Missed calls என் கைபேசியில் தொற்றி கொண்டிருக்கும் 
அப்போதுதான் நினைவிற்கு வரும் 
மனைவி வாங்கி வர சொன்ன பொருட்கள் 
ஆனால் அதற்குள் 
கடிகாரம் இரவு 8-ஐ தொட்டுவிடும் 

மீண்டும் ஒன்று/இரன்டு மணிநேரம் பிரயாணித்து 
வீட்டை அடைந்து 
டிவி-ல் முகம் புதைத்து 
இரவு ஆகாரம் முடித்து 
வாழக்கையின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்ளமலே... 
வாழக்கையை ரசித்து வாழ்வது எப்படி 
என்று அறிந்துகொள்ளமேலே... 
உறங்கி போகிறோம்...


No comments: