Tuesday 20 September 2011

ஒவ்வொரு மூச்சிலும் உன் நினைவு .........


மறக்க நினைத்தால் மலருகின்றது.. 
வெறுக்க நினைத்தால் வளர்கின்றது.. 

அழிக்க நினைத்தால் அணைக்கின்றது.. 
முறிக்க நினைத்தால் முளைக்கின்றது.. 

முடியவில்லையடி.... 

உன்னை விட்டு நான் விலகிவிடும் முன், நான் என்னை விட்டும் விலகிட வேண்டும்.. 

முதன் முறையாக மனம் 
விடியா இரவை வேண்டுகின்றது! 
விடை இல்லா கேள்வியைக் கேட்கின்றது! 

நிலவைக் கண்டால் என் நினைவு உனக்கு வருவது போல் 
நான் விடும் ஒவ்வொரு மூச்சிலும் உன் நினைவு எனக்கு

No comments: