Friday 29 July 2011

"விருந்தே உண்டு"

அவள் மேடை ஏறி பேசியதில்லை..
ஆனால்
பேச தொடங்கினால்
ஜனம் மொத்தமும் வாயடைத்து கேட்கும்...!!
அவள் தன்னைத்தான் "அழகில்லை" என்பாள்...
ஆனால்
"அழகிகள் என தம்பட்டம் அடிப்பவர்களேல்லாம்
அவளை திரும்பி பார்ப்பார்கள்..!!
அவளுக்கு "கவிதை" பிடிக்காது...
ஆனால்
எல்லா கவிதைக்கும்
அவளை பிடிக்கும்..!!
அவள் யாரையும் காதலிப்பதில்லை...
ஆனால்
ஒரு ஊரே
அவள் காதலிக்க ஏங்குகிறது
என்னோடு சேர்த்து..!!
அவள் பெயரை...,
என் கவிதை விரும்பிகள் விசாரிக்கிறார்கள்..
காத்திருங்கள்...
அவள் என்னை விசாரிக்க தொடங்கியதும்..
ஒரு "விருந்தே உண்டு"
எல்லாருக்கும்..!!

No comments: