Thursday 28 July 2011

புயலாக மாறி என்னை வீழ்த்தியது .....

நீ பேசும் ஓசை கேட்க பூக்களிடம் கதைகள் பேசினேன்
பூக்கள் கூட என்னை வெறுத்தன...
நீ சிரிக்கும் ஓசை கேட்க கடல் அலைகளிடம் சிரித்தேன்
அலைகள் கூட மௌனம் ஆகின
நீ சிணுங்கும் ஓசை கேட்க சாரல் மழையில் நனைந்தேன் ...
வானம் கூட வெறிச்சிட்டு என்னை வெறுத்தது
நீ சொல்லும் சொல்லை கேட்க தென்றல் சொல் கேட்டேன்
புயலாக மாறி என்னை வீழ்த்தியது ........

No comments: