Friday 29 July 2011

உயிர் வாழுவேன்...

செந்தமிழ் பூமானே,
பூக்களின் செந்தேனே,
கம்பனும் சொல்லாத,
கவிதை உன் னிதழானதே...

நித்திரைக் கொள்ளாது,
நேரமும் செல்லாது,
நித்தமும் தடுமாறி,
காதலில் கரைகின்றனே...
உயிரினில் உனை வைப்பதா,
உருகியே நிதம் காய்வதா,
மடியோடு தலைசாய்த்து கொண்டாலென்ன,
உணர்வோடு உயிராக கலந்தாலென்ன...
நிலாக் கூட்டம் பக்கம் வந்து,
எனை நோக்கி சிரிக்கக் கண்டு,
நிதம் உனை ரசிப்பேனே பூங்கொடியே...
உனக்காக ஏங்கும் நெஞ்சம்,
உயிராக எண்னும் என்றும்,
மறக்காமல் போகாதே ஆருயிரே...
கண் பார்க்க காதல் வந்து அணைக்கின்றதே,
இடம் மாறி இதயம் நூறு துடிக்கின்றதே...
எனக்காக வாழ்க்கைத் தந்தால்,
உயிர் வாழுவேன்...

No comments: