Friday 29 July 2011

உன் உறவுக்காய் ஏங்குகிறேன் ......

வேண்டி கொள்ளும் தெய்வம்
வேண்டிய வரங்களை எல்லாம்
கொடுப்பது இல்லை.....
என் உயிர் உன்னில் கலப்பதும்
உன் உயிர் என்னில் கலப்பதும்
காதலாம்...
நாம் கலக்கப்பட கூடாது
காதல் கடலில் கவிழ்க்கப்பட வேண்டும்...
உன் ஒற்றை சொல்லில்
என் உலகம் உயிர் பெரும்...
ஆம் உன்னிடம் வேண்டுகிறேன்
அந்த ஒற்றை சொல்லுக்காய்...
தள்ளி நிற்கிறேன் உன் தாவணி
தடம் பதித்த சுவாசம் சுகம்காண
உன் ஒவ்வொரு சுவாசத்திற்கும்
உயிர் கொடுக்க காற்றும்,
உன் கால் தட பதிவுகளுக்காய்
பாதையும் சண்டையிட்டு கொல்லும்
சத்தம் கேட்கிறேன்.....
நீ தீண்டிவிட்டு செல்லும் சிறு செடி கூட
சிலிர்க்கிறது சிறு பனித்துளியாய்
நான் மதிக்கும் நினைவுக்குள்
நீ மட்டும் சுவாசப்படுகிறாய்
நீ மட்டும் ஏன் வேண்டாத
வரங்களை எல்லாம் தருகிறாய்
உறவுகளுக்கு ஏங்கும் முதியவனை போல்
உன் உறவுக்காய் ஏங்குகிறேன் வேண்டிகிறேன்
காதல்(லி) தெய்வமே ....

No comments: