Friday 29 July 2011

திரும்பியே பார்க்கவில்லை.........

அவளிடம்
அவன் அறுபது வினாடிகள் தான் பேச முடிந்தது.
அவள் கை கொடுத்து பிறகு
விடைபெற்று
விலகி நடந்தாள் பதற்றத்தோடு.
மணிக்கணக்கில் பயணித்த களைப்பும்
தடதடவென அடித்து கொள்ளும் இதயமும்
குழம்பி போன மனநிலையோடு அவன்.
எதற்காக அவள் கண்களில் அந்த அதிர்ச்சி?
முதல் சந்திப்பில் தன்னை வேறு தோற்றத்தில் எதிர்பார்த்திருப்பாளோ?
அந்நியனிடம் தயங்கி நிற்பது போல அல்லவா நின்றாள்.
அவன் கற்பனை செய்தது போலவே அவள் இல்லை.
அவன் முன்னால் அவள் நடந்து போகிறாள்.
பார்க்க கூடாது என நினைக்கிறான்.
இவன் பார்க்கிறான் என அவளது நடை தள்ளாடியது.
நீரினுள் படகு போல நடந்தாள்.
ஒவ்வொரு அசைவிலும் சங்கடம்.
அவளுடைய தாய் எந்நேரமும் இங்கே வந்து விடக்கூடும்.
போனில் மனைவியாய் பேசுபவள்
இன்று
தூரத்தில் சென்று மறையும் வரை
திரும்பியே பார்க்கவில்லை.

No comments: