Thursday 28 July 2011

காதலை கூறிவிட வேண்டும்.....

உன் மூச்சுக்காற்று
-என் இமை தழுவ
அதன் உஷ்ணம் தாளாமல்
-நான் கன்னம் கடிக்க
குறும்போடு நீ
-என் காதை திருக
வலிதாங்காமல் நான்
-ஆவென்று அலற
ஏதென்று என்னவென்று
- என் தங்கை பதற
அப்போதுதான் அறிந்தேன்
-அனைத்தும் கனவென்று.
காதல்பித்து முற்றி விட்டதின்
-அறிகுறியோ இது?????
இன்றாகினும் என் காதலை
அவனிடத்தில் கூறிவிட வேண்டும்
-இவ்வாறே ஓடிவிட்டது ஈராண்டுகாலம்.

No comments: