Friday 29 July 2011

உன் இதயத்தில்தான் சுகமாய் இருக்கிறேன்..!!"

நீ
அனுப்புவது
என்
குறும்செய்திக்கு
"பதில்....?!"
எனக்கோ
"நீதான் வேண்டும்"
என்
குறும்செய்திக்கு பதிலாக..!!
*****************************************
நீ
திட்டி அனுப்பிய
குறும்செய்திகளை கைபேசியில்
பார்த்து...
"இதை ஏன் அழிக்கவில்லை..?"
என்றாய்.
"தயவு செய்து அழித்துவிடாதே
என்மீது
நீ எடுத்துகொள்ளும்
அதீத உரிமையின் அடையாளம்தான்
அது..!?" என்றதும்..
"போடா" என அழ தொடங்கினாய்
புன்னகைத்தபடி..!!
****************************************
பார்க்க வருவதற்குள்...
"எங்கே இருக்கிறாய்..?
எங்கே இருக்கிறாய்..?
என
நூறு முறை குறும்செய்தி
அனுப்பி விடுவாய்...
நானோ
பதிலே அனுப்பாமல்
நேரில் வந்து காதில் கிசுகிசுப்பேன்
"எப்போதும்
உன்
இதயத்தில்தான் சுகமாய் இருக்கிறேன்..!!"
என கண்ணடித்து.

No comments: