Friday 29 July 2011

வேண்டுமென்று வேண்டுகிறேன்...........

காதலை எண்ணி
கசந்த நாட்களை வாழ்ந்து பார்கிறேன்,
நீ இல்லாத இந்த பொழுதில்.
கசக்கின்ற இனிய நினைவை
பத்திரமாக பதிய வைக்கிறேன்,
எழுத்தால் இதிலும்,
வலியால் மனதிலும்.
வாழ முயன்றும் வாழ பிடிக்காததால்
நான் துடிக்கும் இந்த இனிய
பொழுதே போதுமடி நான் இறக்க.
உந்தன் பேச்சின் ஓசை
மட்டும் என் மனதில் இனிமையாய் எழ
என் நெஞ்சம் வேகமாய் துடிக்கிறது
உன்னை காண,
நானும் நினைத்தேன் நீ என்னையே
நினைப்பாய் என்று, ஆனால்
உன் மனம் என்னை மறுக்க
நான் எண்ணும் எண்ணெமெல்லாம்
உன்னை வெறுக்க முடியாமல்
துடிப்பதை நினைத்து
வருந்துகிறேன் நீ என்னை விட்டு
பிரிந்து செல்ல வேண்டுமென்று வேண்டுகிறேன்...........

No comments: