Friday 29 July 2011

உன்னை மட்டுமே நினைக்கிறேன் .........

எழுதப்படாத காகிதமாய்
என் உள்ளம் இருந்தபோது
நீ வந்தாய்................
ஒற்றைக் கவிதையாய்..
என் கிறுக்கலான கையெழுத்தும்
கூட கவிதையாகின்றது
உன் பெயரை மட்டும் எழுதுகையில்.
வேலை நிமித்தமாக
வேறொன்றை எழுத நினைத்தாலும்
விரல் உன் பெயரை மட்டுமே எழுதுகின்றது.
அப்பொழுதுதான் அறிந்தேன்
நான் எப்பொழுதுமே
உன்னை மட்டுமே
நினைக்கிறேன் என்று.
நீ உச்சரித்த போதுதான்
என் பெயர் கூட
அழகோ????? தோன்றியது .

No comments: