Monday 11 July 2011

காதல் செய்வீர்.....!!!"

மணிக்கொரு முறை
கடிகார முட்களில்
முத்தசத்தம்
சத்தமிட்டு ஒடிவந்த
இருநதிகள் சலசலத்து
சங்கமிப்பு
சங்கத்தமிழ் சொன்ன
முப்பாலில் மூன்றாம்
இன்பம்
அட..!!
இன்பமாய் அனுதினமும்
சூரியனுக்கு காத்திருக்கும் தாமரை
வினோத இயற்கை
வேதனையும் சாதனையும்
காதலர்க்கே.
காதலுக்கில்லை
இங்கு இன்னும் யாராவது
காதல் செய்யவில்லையா??
புல்லாங்குழலாக மூங்கில்கள்
என்றும் த‌யார்..
ஒருமுறையாவது இசைத்து பார்
முன்சென்ற பேருந்தின் பின்
மூன்று வார்த்தையில் ஹைக்கு
"ஆதலினால்
காதல்
செய்வீர்.....!!!"
அரசாங்கத்தின் இலவச பிரசாரம்

No comments: