Friday 3 June 2011

என்னுள் பாதி .........

என் தோளோடு தலைசாய்க்க
தோழியைபோல் தோள் கொடுக்க
நிஜத்தை உணரவைக்க
நிழலாய் கூடவர
என்னுயிராய் வந்தவள்
என் பிரியமான மனைவி
எத்தனை யுகம்தான்
தவம் இருந்தேன்
எத்தனை காலம்தான்
விழித்திருந்தேன்
என் உயிரை தேடி அலைந்தேன்
என் உயிர் என்னிடம்
சேருமா இன்று
என் உயிர் காணமல்
என் ஆயுள் முடிந்துவிடுமா
என்று அச்சம் கொண்டேன் .
ஒரு வலைதளத்தில்
கண்டுகொண்டேன் அவளை
அழகாக சிரித்துகொண்டிருந்தாள்
என்னுள் ஆட்சி செய்பவள்
என் உயிரை கண்டபிறகு
பேசதுடித்தேன் அவளிடம்
முதன் முதலில் அவளின்
இனிய குரலை கேட்டேன்
என்னையே மறந்தேன்
எனக்கு அவள் தோழி ஆனாள்
பிறகு காதலி ஆனாள்
பின் என்னுள் பாதி ஆனாள்
அவள்தான் என் உயிரானவள்
என் உயிர் மனைவி ஆனவள்
என்னை முழுவதுமாக
ஆக்கிரமித்தவள்
என்னில் பாதியனவள்
அவள்தான் ............
என் உயிர்
மனைவி

No comments: