Friday 3 June 2011

பெண்மை

ரோஜா இதழ்களின் நடுவே
மொட்டு மல்லிகை சரங்கள்
என்னவளின் வெண்பற்கள்
வெண்ணிலவின் நடுவே
இரு இதழ் ரோஜா
என்னவளின் இதழ்கள்
கால் முளைத்த ரோஜா
வீதியில் நடந்த அடையாளம்
என்னவளின் பாதச் சுவடுகள்
ருப்பு வெள்ளையில்
பூத்த இருமலர்கள்
என்னவளின் விழிகள்
சிதறிய முத்துக்களின்
மெல்லிசை ஒலிகள்
என்னவளின் சிரிப்பு
வெண்பனியில் நனைந்த
ஒற்றை ரோஜா
குளித்த என்னவளின் முகம்
ன்னவள் துயில் கொள்கிறாள்
சலனம் செய்யாமல்
மெல்ல வீசும் தென்றல்
பொய்யெனும் போதையில்
மதிமயங்கும் பெண்மைகள்
மறந்து போகிறார்கள்
உலக அழகில் சிறந்தது
பெண்மை என்பதை
பெண்மையின் அழகை
மிகைப்படுத்திச் சொல்கையில்
உணர்ந்து கொள்ளுங்கள்
அவர்கள் பொய்யர்கள் என்று

No comments: