Friday 3 June 2011

விடை தேடி...........

கருவறை நீர்க்குடம் உடைந்து
உதிரத் துளிகள் படிந்த
உயிர் பொதிந்த மாமிசம்
நீர்நிரம்பிய பச்சை மாமிசத்தில்
உயிர்த்தெழும் உணர்வுக்கும் உணர்ச்சிக்கும்
எத்தனை விசித்திர முகங்கள்
ஏற்கனவே எழுதப்பட்ட விதி
இரவல் மாமிசம் மரணிக்கும்முன்
துடரும் தேடல்களின் வழியே
இரத்த பந்தமென்று சிலர்
உற்ற உறவுகளென்று பலர்
கட்டிய உறவென்று ஒருத்தி
பெத்த உறவென்று அவர்கள்
இவர்களின் உரிமைத் துரத்தல்
காத்திருக்கும் கடமைகள் ஒருபக்கம்
கால நாழிகைகளின் மரணத்தில்
உயிர் உதிர்ந்து கிடக்குது
என் பச்சை மாமிசம்
இதுவரையிலான மண் ஜென்மத்தில்
வென்றேனா இல்லை தோற்றேனா
விடை தேடிச் செல்கிறேன்
இறைவனிடத்தில்

No comments: