Wednesday 1 June 2011

பெண்மனசு......


டமைக்குள் ஒளிந்திருக்கும்
அங்கங்களின் இரகசியத்தை
சிந்தையில் உயிர்தெளுப்பும் கயவன்
ச்சை உணர்ச்சிக் கழிவுகளை
அவசராமாய் கக்கி களையும்
மாமிச உண்ணிகள்
ச்சை புணர்தலில்
மதி மயங்கும் ஆண்மகள்
பெண்ணின் ஆழ்மனதில் உறங்கும்
எண்ணங்களை தட்டி எழுப்புவதில்லை
ம் விழியிலும் அகத்திலும்
காம இருளை உடுத்திய
கண்ணுள்ள குருடர்கள் காண்பதில்லை
பெண்ணின் ஆழ்மனதை
பெண் மனப் புத்தகத்தை
திறக்காமலும் வாசிக்கப்படாமலும்
சில ஆண்மைகள் சொல்லித்திரிகிறார்கள்
பெண்மனசு ஆழம் என்று
ப்பன், சகோதரன், கணவன்
ஆண்மைகளின் ஆதிக்க ஆளுமையால்
தம் மனதின் எண்ணங்களை
இன்றும் கொன்று புதைக்கிறார்கள்
சில பாவம் பெண்மைகள்
றும் கடலும் ஆழமாம்
கரையில் நின்று வேடிக்கைபாற்பவர்கள்
வறட்டு பேதங்களை களைந்து
விழுந்து மூழ்கி நீந்துங்கள்
ஆழத்தில் புதைந்திருக்கும்
முத்துக்களை காணலாம்

No comments: