Monday 2 May 2011

உன்னோடு வாழும் உரிமை..

நீ முகம் பார்க்க வந்தால்
கண்ணாடிக்கு கண்கள் முளைத்து விடுகின்றன..
நீ தூக்கிக் கொஞ்ச வந்தால்
பூக்களுக்கு கைகள் முளைத்து விடுகின்றன..
நீ கூட்டிச் செல்ல வந்தால்
காற்றுக்கு கால்கள் முளைத்து விடுகின்றன..
உன் பார்வை பட நேர்ந்தால்
நிலவுக்கு ரெக்கைகள் முளைத்து விடுகின்றன..
இவை எல்லாம் சேர்ந்து
உன்னோடு வாழ உரிமை கேட்டு
இப்போது என்னோடு சண்டை பிடிக்கின்றன…
.

No comments: