Monday 2 May 2011

வாழ்தல்…


நிச்சயிக்கப்பட்ட முடிவோடு தொடங்கும்
வாழ்க்கைப் பயணத்தில்
நமக்கான வாழ்தல் என்பது
ஏனோ பெரும்பாலும்
சாத்தியமற்றுப் போகிறது..
பிறந்தது முதல் பிள்ளைப் பிராயத்து தினங்கள்
இயல்பாய் அறிந்துகொள்ளும் தகுதி இன்றியே
நகர்ந்துவிடுகின்றன..
வாலிப வயதுகள் வண்ணக் கனவுகளின் ஆக்கிரமிப்பில்
வசம் இழந்துவிடுகின்றன..
மணமானபின் துணையை சார்ந்து
கரையும் காலங்கள்..
அடுத்து பெற்றெடுத்த பிள்ளைகளுக்காக
தொடர்ந்தோடும் நாட்கள்..
இப்படி ஒவ்வொரு கணமும்
நமக்கான வாழ்வை நமது வாழ்தலை
புறந்தள்ளி வைத்துவிட்டு புறப்படத் தயாராகிறோம்
அடுத்தடுத்த நிலை நோக்கி..
நில்லாமல் கடந்துகொண்டிருக்கும்
இந்த வாழ்வுப் பயணத்தில்
நமக்கே நமக்கான அந்த வாழ்தலை
எப்பொழுதுதான் வாழப்போகிறோம் நாம்…

No comments: